என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காட்டு யானை கூட்டம்"
- தேயிலை பறிக்க தொழிலாளர்கள் செல்ல வேண்டாம் என அறிவுரை கூறியுள்ளனர்.
- பெண் யானை ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு குட்டி ஈன்றது.
வால்பாறை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கு பின்னர் வால்பாறையில் வனப்பகுதி செழிப்பாக உள்ளது. அதே நேரம் சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால், கேரள வனப்பகுதியில் பக்தர்கள் நடமாட்டம் காரணமாக அப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் மளுக்குப்பாறை வனப்பகுதி வழியாக வால்பாறைக்கு இடம் பெயர்ந்து வரத் தொடங்கி உள்ளன.இந்த யானைகள் வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.
யானை கூட்டத்தில் ஒரு பகுதி யானை கூட்டம் தாய் மூடி எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ளது. அதில் பெண் யானை ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு குட்டி ஈன்றது.
இந்த யானை சுற்றிலும் பிற யானைகள் அரணாக நின்று, பாதுகாப்பளித்து வருகின்றன. இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.இதற்கிடையே அந்த வழித்தடத்தில் செல்லும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
தாய்மூடி எஸ்டேட் பகுதியில் ஒரு யானை கூட்டம் முகாமிட்டுள்ளது. அதில் பெண் யானை ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு குட்டி ஈன்றது. பிறந்து சில நாட்களே ஆன குட்டியை பாதுகாக்க யானை கூட்டம் தேயிலை காட்டில் முகாமிட்டுள்ளது.
எனவே யானை கூட்டம் முகாமிட்டுள்ள பகுதியில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்க செல்லக்கூடாது.
மேலும் அந்த வழித்தடத்தில் செல்லும் மக்கள் மிக கவனமாக செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 700-க்கும் மேற்பட்ட வாழைகளை முறித்து சாப்பிட்டதோடு, மிதித்து நாசம் செய்தது.
- விவசாயிகள் செய்வதறியாது கவலையுடன் இருந்து வருகின்றனர்.
கோவை:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளான ஓடந்துறை, நெல்லித்துறை, ஊமப்பாளையம், தாசம் பாளையம், குரும்பனூர் ,தோலம்பாளையம், வெள்ளியங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழை உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் பிரதானமாக செய்யப்பட்டு வருகிறது.
சமீபகாலமாக உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் புகும் காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதோடு மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.
குறிப்பாக கடந்த பல நாட்களாகவே தாசம் பாளையம், குரும்பனூர், தோலம்பாளையம், வெள்ளியங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் தொடர்ந்து விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது.
இதனால் விவசாயிகள் செய்வதறியாது கவலையுடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு தோலம்பாளையம் மணல்காடு பகுதிகளில் மக்கள் வசிக்கும் பகுதியின் அருகிலேயே காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தது. இந்த யானைகள் கூட்டம் திடீரென ராமசாமி என்பவரது தோட்டத்திற்குள் சோலார் மின்வேலியினை உடைத்து உள்ளே புகுந்தது.
அங்கு பயிரிடப்பட்டிருந்த சுமார் 700-க்கும் மேற்பட்ட வாழைகளை முறித்து சாப்பிட்டதோடு, மிதித்து நாசம் செய்தது. இதனை கண்டு ராமசாமியின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்